Tuesday, February 9, 2010

அன்னியம் (முதல் கவிதை)

முதல் முறை பேசிய போது
தோழியா என்றேன்
அழகிய தமிழில் இல்லை என்றாலும்
அடுத்த மொழியில்
அதற்கும் மேல் என்றாய்


ஆண்டுகள் பல கழித்து
அதே கேள்வியை நீ என்னிடம்.......


எப்படி சொல்வதென்று தெரியவில்லை எனக்கு
அன்னியமாக்கியது நீதான் என்று.

2 comments:

  1. முதல் கவிதை என்று சொல்ல முடியாது.
    கவி மனம் உள்ளது.
    கவிதை எழுதுங்கள்.
    கவிதை, உணர்வுகளை பிறருடன் பகிர்ந்து கொள்ளும்.
    அது அன்பை, நட்பை, தோழமையை,...வளர்க்கும்.
    கவிதையை இலக்கியத்தின் அரசி என்பார்கள்.
    அன்பன்
    கி.பி

    ReplyDelete
  2. அன்னியம் கவிதை என்ன சொல்ல வருகிறது .......கடைசி இரண்டு வரிகள் பிடி படவில்லை ......விளக்கமுடியுமா?
    நட்புடன்
    மகேஷ்

    ReplyDelete